உக்ரைனின் வடக்கு சுமி பகுதியில் கீவ் நகருக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் புகையிரதம் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , 30 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் ரஷ்யாவின் இந்த தாக்குதல்களால் உக்ரைனின் மின் கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு, 50,000 குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இந்தத் தாக்குதலைக் கண்டித்த உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என்று தெரிந்தும் தாக்குதல் நடத்துவது என்பது தீவிரவாதம் எனவும் இதனை உலக நாடுகள் ஏற்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
போர் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் நெருங்கும்போது, உக்ரைனின் மின் கட்டமைப்பை ரஷ்ய படைகள் தாக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

















