பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே இன்று (21) 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் அதிர்வு கொல்கத்தா, வடகிழக்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
டாக்காவிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள நர்சிங்டியில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.
மேலும் நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீ என்றும் USGS தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில், காலை 10:10 மணியளவில் சில வினாடிகள் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.
கூச் பெஹார், தக்ஷின் மற்றும் உத்தர் தினாஜ்பூர் உள்ளிட்ட மேற்கு வங்கத்தின் ஏனைய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
குவஹாத்தி, அகர்தலா மற்றும் ஷில்லாங் போன்ற நகரங்களிலும் பல குடியிருப்பாளர்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர்.



















