• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் வழிநடத்தலில், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மீன்பிடிப் படகுகள் உடனடியாக அனுப்பி வைப்பு!

பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் வழிநடத்தலில், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மீன்பிடிப் படகுகள் உடனடியாக அனுப்பி வைப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/29
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடு முழுவதும் பரவிவரும் வெள்ள அனர்த்த நிலைமையை அடுத்து, பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக மீன்பிடிப் படகுகளை உடனடியாக ஈடுபடுத்துமாறு, கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் பிரதி அமைச்சர், ரத்ன கமகே அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

கடற்றொழில் துறையின் பங்களிப்பை ஒருங்கிணைக்கும் நோக்கில், அன்னாரின் தலைமையில் இன்று (29) அவசரக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இணையவழி ஊடாக நடைபெற்ற இந்த அவசர சந்திப்பில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த மற்றும் இலங்கை கடற்படையின் சிரேஷ்ட அதிகாரஅதிகாரி ஒருவரும் கலந்துகொண்டனர்.

அவிசாவளை, சிலாபம் மற்றும் கேகாலை போன்ற வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், மீட்புப் பணிகளுக்கு நிலவும் படகுப் பற்றாக்குறை குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

“எமது மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர். படகுப் பற்றாக்குறை ஒரு பாரிய பிரச்சினையாகும். எனவே, கடற்றொழில் அமைச்சு என்ற வகையில், அந்தக் குறையை நிவர்த்தி செய்ய நாம் தலையிடுகிறோம்,” என பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

“அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடமிருந்து (DMC) கோரிக்கை கிடைத்தவுடன், தேவையான படகுகளை வழங்குமாறு எமது மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர்களுக்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன்.

இலங்கை கடற்படையினர் அந்தப் படகுகளின் போக்குவரத்து மற்றும் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து, வேகமானதும் ஒழுங்கமைக்கப்பட்டதுமான மீட்புப் பணியை உறுதிசெய்வார்கள்.”

இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து, தேசிய மீட்புப் பணிக்கு ஆதரவளிக்கும் முகமாக, கொழும்பிலிருந்து 30 படகுகள், நீர்கொழும்பிலிருந்து 20 படகுகள் மற்றும் அளுத்கமவிலிருந்து 20 படகுகளை உடனடியாக அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை கடற்றொழில் திணைக்களம் ஏற்கனவே மேற்கொண்டுள்ளது.

மீட்புப் பணிகளுக்கு இணையாக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்கான விரிவான திட்டம் ஒன்றையும் பிரதி அமைச்சர் அவர்கள் நடைமுறைப்படுத்தியுள்ளார்:

உடனடி சேத மதிப்பீடு: மீன்பிடிப் படகுகள், உபகரணங்கள் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை வழங்குமாறு கடற்றொழில் திணைக்களம் மற்றும் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு (NAQDA) பணிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு நேரடி நிவாரணம்: வழங்கப்படும் எந்தவொரு நிவாரணமும் இடைத்தரகர்கள் இன்றி, நேரடியாகப் பாதிக்கப்பட்ட மீனவருக்குச் சென்றடைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொழிலுக்குச் செல்ல முடியாத மீனவக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கான பிரேரணை ஒன்று ஜனாதிபதி செயலகத்திற்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

உட்கட்டமைப்பு புனரமைப்பு: மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் இறங்குதுறைகளுக்குச் செல்லும் சேதமடைந்த அணுகல் வீதிகள் குறித்து துரித கணக்கெடுப்பொன்றை மேற்கொண்டு, புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 26 ஆம் திகதி அமைச்சினால் வெளியிடப்பட்ட முன் எச்சரிக்கைகள், கடலில் ஏற்படவிருந்த ஒரு பெரும் அனர்த்தத்தைத் தடுப்பதற்கு உதவியதாக நினைவுகூர்ந்த பிரதி அமைச்சர், அந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றிய மீனவ சமூகத்திற்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் 1666.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு!

Next Post

இரணைமடுக் குளத்தின் வெள்ளப் பாதுகாப்புச் சுவர் உடைப்பு எடுத்துள்ளது!

Related Posts

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை

மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் சேட்டை புரிந்த தந்தைக்கு விளக்கமறியல்

2026-01-16
தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டமும் ஏனையோருக்கு ஒரு சட்டமும் இந்த நாட்டில் இருப்பது ஏன் –  சீலரத்ன தேரர்
இலங்கை

தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டமும் ஏனையோருக்கு ஒரு சட்டமும் இந்த நாட்டில் இருப்பது ஏன் – சீலரத்ன தேரர்

2026-01-16
மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட பட்டிப்பொங்கல் பூஜை வழிபாடுகள்
இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட பட்டிப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

2026-01-16
மருதமுனையில் டெங்கு அபாயம்! சில வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அம்பாறை

மருதமுனையில் டெங்கு அபாயம்! சில வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

2026-01-16
எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றில் முன்நிலையாகுமாறு இளங்குமரன் MP அழைப்பாணை !
இலங்கை

எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றில் முன்நிலையாகுமாறு இளங்குமரன் MP அழைப்பாணை !

2026-01-16
இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின்  புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோரி போராட்டம்!
இலங்கை

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோரி போராட்டம்!

2026-01-16
Next Post
இரணைமடுக் குளத்தின் வெள்ளப் பாதுகாப்புச் சுவர் உடைப்பு எடுத்துள்ளது!

இரணைமடுக் குளத்தின் வெள்ளப் பாதுகாப்புச் சுவர் உடைப்பு எடுத்துள்ளது!

முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல்!

முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல்!

பிரபல கானா பாடகர் நவகம்புர  கணேஷ் காலமானார்!

பிரபல கானா பாடகர் நவகம்புர  கணேஷ் காலமானார்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
வா வாத்தியார் திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா?

வா வாத்தியார் திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா?

0
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் சேட்டை புரிந்த தந்தைக்கு விளக்கமறியல்

0
கனேடிய பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு விஜயம் செய்ய தீர்மானம்!

கனேடிய பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு விஜயம் செய்ய தீர்மானம்!

0
தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டமும் ஏனையோருக்கு ஒரு சட்டமும் இந்த நாட்டில் இருப்பது ஏன் –  சீலரத்ன தேரர்

தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டமும் ஏனையோருக்கு ஒரு சட்டமும் இந்த நாட்டில் இருப்பது ஏன் – சீலரத்ன தேரர்

0
மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட பட்டிப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட பட்டிப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

0
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் சேட்டை புரிந்த தந்தைக்கு விளக்கமறியல்

2026-01-16
வா வாத்தியார் திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா?

வா வாத்தியார் திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா?

2026-01-16
தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டமும் ஏனையோருக்கு ஒரு சட்டமும் இந்த நாட்டில் இருப்பது ஏன் –  சீலரத்ன தேரர்

தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டமும் ஏனையோருக்கு ஒரு சட்டமும் இந்த நாட்டில் இருப்பது ஏன் – சீலரத்ன தேரர்

2026-01-16
கனேடிய பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு விஜயம் செய்ய தீர்மானம்!

கனேடிய பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு விஜயம் செய்ய தீர்மானம்!

2026-01-16
மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட பட்டிப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட பட்டிப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

2026-01-16

Recent News

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் சேட்டை புரிந்த தந்தைக்கு விளக்கமறியல்

2026-01-16
வா வாத்தியார் திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா?

வா வாத்தியார் திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா?

2026-01-16
தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டமும் ஏனையோருக்கு ஒரு சட்டமும் இந்த நாட்டில் இருப்பது ஏன் –  சீலரத்ன தேரர்

தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டமும் ஏனையோருக்கு ஒரு சட்டமும் இந்த நாட்டில் இருப்பது ஏன் – சீலரத்ன தேரர்

2026-01-16
கனேடிய பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு விஜயம் செய்ய தீர்மானம்!

கனேடிய பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு விஜயம் செய்ய தீர்மானம்!

2026-01-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.