இங்கிலாந்தில் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் விளையாடும் பிரபலமான அணிகளில் ஒன்றான செல்சி கால்பந்து கழகத்தின் தலைமை பயிற்சியாளராக என்ஜோ மரிஸ்கா 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடக்கம் பணி புரிந்து வருகிறார்.
அவரது பயிற்சியின் கீழ் செல்சி அணி கொன்பரன்ஸ் லீக் மற்றும் கழக உலகக் கோப்பையை வென்று சாதித்தது.
ஆனால் தற்போது பிரிமீயர் லீக் போட்டியில் செல்சி அணியின் செயற்பாடு மந்த நிலையில் இருக்கிறது. கடைசி 7 லீக் போடடிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இருப்பதுடன் புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் காணப்படுகிறது.
இந் நிலையில் அவருக்கும், கழக நிர்வாகத்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. செல்சி கழகத்தில் தனக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று சமீபத்தில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் ஒப்பந்த காலம் 2029-ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மரிஸ்கா நேற்று இராஜனாமா செய்திருந்தார்.


















