2026 ஆம் ஆண்டின் முதலாவது பகுதி அளவு சூரிய கிரகணம் எதிர்வரும் 17 ஆம் திகதி நிகழவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அபூர்வ நிகழ்வானது அன்றைய தினம் பிற்பகல் 3.26 மணிக்கு ஆரம்பமாகிஇ இரவு 7.57 மணி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக இந்த வானியல் நிகழ்வு நீடிக்கவுள்ளது.
சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் கடந்து செல்லும்போது, சூரியனின் மையப்பகுதியை சந்திரன் மறைப்பதன் காரணமாகஇ சூரியன் ஒரு ஒளிவட்டம் போன்று காட்சியளிக்கும்.
இது ஒரு பகுதி அளவு சூரிய கிரகணமாக அமைவதால், சூரியனின் ஓரப்பகுதிகள் பிரகாசமான வளையமாகத் தென்படும்.
இந்த சூரிய கிரகணத்தை உலகின் பல நாடுகளில் அவதானிக்க முடிந்தாலும்இ இந்தியாவில் இதனைப் பார்க்க முடியாது என வானியல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பிட்ட சில வலயங்களில் உள்ள மக்கள் மட்டுமே இந்த இயற்கை அதிசயத்தை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுவர்.
















