ஆண்டனி பியர்ஸ் (Anthony Pierce) என்ற பாதிரியார், 15 வயது சிறுவன் ஒருவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் புகார்களை வேல்ஸ் திருச்சபை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மூடிமறைத்துள்ளது.
இந்த மூடிமறைப்பால், ஆண்டனி பியர்ஸ் (Anthony Pierce) திருச்சபையின் உயரிய பதவிகளுக்கு உயர்ந்து, பின்னர் ஸ்வான்சி மற்றும் பிரெகன் (Swansea and Brecon) பகுதியின் பிஷப்பாக மாற முடிந்தது.
இதேவேளை, 85 வயதான பியர்ஸ், மற்றொரு சிறுவனுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காகக் கடந்த ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார் .
இதேவேளை, கடந்த 1986 முதல் 2010 வரை நான்கு முறை ஆண்டனி பியர்ஸ் (Anthony Pierce) மீது புகார்கள் அளிக்கப்பட்டும், திருச்சபையின் மூத்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
திருச்சபையின் நற்பெயரைப் பாதுகாப்பதற்காக உண்மைகளை “தரைவிரிப்பிற்கு அடியில் தள்ளி மறைக்கும்” கலாசாரம் அங்கு நிலவியதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் தற்போது உயிருடன் இல்லை எனவும் கூறப்படுகிறது.
இதேவேளை, 1999-ஆம் ஆண்டு பியர்ஸ் பிஷப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவரது நடத்தை குறித்த வதந்திகள் தெரிந்திருந்தும், அப்போதைய பேராயர் அல்வின் ரைஸ் ஜோன்ஸ் அவற்றை அலட்சியம் செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுவன் ஆண் என்பதால் இது “பெடோஃபிலியா” இல்லை என்ற தவறான புரிதலும் திருச்சபையில் நிலவியது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதைய பேராயர் செர்ரி வான் (Cherry Vann) இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களைக் கவனிக்கத் தவறிய வாய்ப்புகள் மற்றும் தவறான அணுகுமுறைகளை இந்த அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது என அவர் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.













