14 வருடங்களாக ஓமான் ஆடவர் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய துலீப் மெண்டிஸ், அந்த பதவியில் இருந்து விலகி ஓமான் கிரிக்கெட்டில் தலைமை மேம்பாட்டு அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
துலீப் மெண்டிஸ், ஓமான் கிரிக்கெட்டை களத்திலும், களத்திற்கு வெளியேயும் முன்னெப்போதும் இல்லாத உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
ஓமன் அணியிலும் கிரிக்கெட்டின் வளர்ச்சியிலும் மெண்டிஸின் தாக்கம் பரவலாகப் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில், தேசிய அணியை அதன் அடுத்த அத்தியாயத்திற்கு அழைத்துச் செல்ல, ஓமன் கிரிக்கெட் புதிய தலைமை பயிற்சியாளராக சுலக்ஷன் குல்கர்னியை நியமித்துள்ளது.
குல்கர்னி கிரிக்கெட்டில் பரந்த அனுபவத்தை கொண்டுள்ளார்.
மேலும், அவர் ஓமான் அணியை ஒரு அற்புதமான புதிய சகாப்தத்திற்கு வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.














