தேவேந்திரமுனை கடற்பகுதியில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றபோது பறிமுதல் செய்யப்பட்ட, பல நாள் மீன்பிடிப் படகின் பெண் உரிமையாளரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
59 வயதான பெண் சந்தேக நபரும், அவரது 35 வயதான மகனும் மிரிஸ்ஸ வடக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கைக்குள் போதைப்பொருட்களை வைத்திருத்தல், கடத்துதல் மற்றும் இறக்குமதி செய்தல், அத்துடன் குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
பல நாட்கள் பயணம் செய்த மீன்பிடி இழுவைப் படகு ஒன்று, மார்ச் 15 அன்று தேவேந்திரமுனைக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் இடைமறிக்கப்பட்டது.
அப்படகின் மீது ஏறத்தாழ 133 கிலோ கிராம் ஹேரோயின்கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
இடைமறிப்பின் போது அந்த மீன்பிடிப் படகில் இருந்த ஐந்து நபர்களும் கடற்படையால் காவலில் எடுக்கப்பட்டனர்.
டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு அந்தப் படகு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் பொலிஸார் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் (PNB) முறைப்படி கைது செய்யப்பட்டனர்.
கைதான 25 முதல் 35 வயதுக்குட்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் மிரிஸ்ஸ, கம்புருகமுவ மற்றும் ஹபரதுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
போதைப்பொருள் வைத்திருத்தல், கடத்தல் மற்றும் இறக்குமதி செய்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர் என பொலிஸ் தெரிவித்தது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.












