மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோர்த்ரிவத்தப் பகுதியில் நேற்றைய (03) தினம் சட்டவிரோத மாணிக்கற்கள் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கேலியா பொலிஸ் விசேட அதிரடிப் படையின் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்த கைதின் போது சட்டவிரோத மாணிகககற்கள் அகழ்வுப் பயணிக்காக சந்தேக நபர் பயன்படுத்திய பொருட்களையும் அதிகாரிகள் மீட்டனர்.
கைதானவர் 51 வயதுயை மஸ்கெலியாப் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் கணப்பட்டுள்ளார்.
அவர் மேலதிக சட்டநடவடிக்கைக்காக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியாப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.














