‘சித்திரை புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ்இ சிங்கள மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘பிறந்திருக்கும் சித்திரை புத்தாண்டு இலங்கைவாழ் மக்களுக்கு
சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும். பேதங்கள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் இந்த புத்தாண்டானது, சமூகத்தின் மறுமலர்ச்சிக்கான ஒரு பண்டிகையாக உள்ளதுடன், நாட்டின் தேசிய கலாச்சாரமாகவும் திகழ்கிறது.
மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு வாழவும், இலங்கை அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைந்த தேசமாகவும் மாறுவதற்கான ஒரு வருடமாகவும் இப்புத்தாண்டு மலரட்டும்.
நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு நாம் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். சமகால சூழலில் சரியான திசைவழி நோக்கி பயணிப்பதன் ஊடாக எமது மக்கள் எண்ணிய எதிர்கால இலட்சியங்களை எட்டிவிட முடியும்.
இந்த ஆழமான நம்பிக்கையோடு சித்திரை புத்தாண்டை கொண்டாடி மகிழும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இப்புத்தாண்டு அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த சிறப்பான ஆண்டாக அமைய பிரார்த்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.’ எனவும் தமது வாழ்த்துச் செய்தியில் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.


















