இன்று பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதிகாலை நேரங்களில் மத்திய, சபரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காற்று:
காற்று தென்மேற்கு திசையிலிருந்தோ அல்லது திசை மாறி மாறி வீசும். காற்றின் வேகம் மணிக்கு (20-30) கி.மீ. ஆக இருக்கும்.
கடலின் நிலை:
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் அமைதியாக இருக்கும்.
இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக பலத்த காற்றும், மிகவும் கொந்தளிப்பான கடலும் எதிர்பார்க்கப்படலாம்.













