2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஞாயிற்றுக்கிழமை (19) இரவு நடைபெற்ற போட்டியில் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கானலி ஆகியோர் தங்களது பிரமிக்க வைக்கும் சிக்ஸர் மழையால் முல்லன்பூர் மைதானத்தை அதிர வைத்தனர்.
ஆர்யா (37 பந்துகளில் 93 ஓட்டம்) மற்றும் கானலி (46 பந்துகளில் 87 ஓட்டம்) ஆகியோரின் அதிரடி ஆட்டம் அதனைத் தொடர்ந்த கச்சிதமான பந்துவீச்சினால் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம், பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
முல்லன்பூதிரில் அமைந்துள்ள மகாராஜா யதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்து வீசுவதற்கு தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ஓட்டங்களை குவித்தது.
ஆரம்ப வீரராக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் எதுவித ஓட்டமின்று தன முதலாவது பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
எனினும் இரண்டாவது விக்கெட்டுக்காக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கானலி ஆகியோர் வலுவான கூட்டணி அமைத்து 182 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
பிரியான்ஷ் ஆர்யா 37 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒன்பது சிக்ஸர் அடங்கலாக 93 ஓட்டங்களை எடுத்தார்.
கூப்பர் கானலி 46 பந்துகளில் 7 சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடங்கலாக 87 ஓட்டங்களை எடுத்தார்.
பின்னர் கடினமான வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 200 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
அணி சார்பில் அதிகபடியாக ரிஷப் பந்த் 43 ஓட்டங்களையும், ஐடன் மார்க்ராம் 42 ஓட்டங்களையும் மற்றும் மிட்செல் மார்ஷ் 40 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.
இந்த வெற்றியானது நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாபின் தோல்வியற்ற பயணத்தை நீட்டித்தது.
அதே நேரத்தில் லக்னோ அணி தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைச் சந்தித்து, எட்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.













