British Airways நிறுவனத்தின் உரிமையாளர் International Airlines Group, மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர்நிலையால் விமான டிக்கெட் விலைகள் உயரக்கூடும் என எச்சரித்துள்ளது. குறிப்பாக Strait of Hormuz மூடப்பட்டதன் காரணமாக எண்ணெய் விலைகள் திடீரென அதிகரித்துள்ளன.
Iran தொடர்பான மோதல் தீவிரமடைந்ததால், உலகளாவிய எரிபொருள் சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்களுக்கு தேவையான ஜெட் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் பயணிகளுக்கு அதிக கட்டணமாக மாறும் என IAG தெரிவித்துள்ளது.
விமான நிறுவனங்கள் பொதுவாக “hedging” என்ற முறையில் முன்கூட்டியே எரிபொருளை நிரந்தர விலையில் வாங்கி விலை ஏற்ற இறக்கங்களை சமாளிக்க முயற்சிக்கின்றன. இருப்பினும், தற்போதைய நிலைமைக்கு அவர்கள் முழுமையாக பாதுகாப்பாக இல்லை என IAG கூறியுள்ளது.
தற்போது எரிபொருள் விநியோகத்தில் உடனடி பாதிப்பு இல்லை என்றாலும், எதிர்காலத்தில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. போக்குவரத்துத் துறை (Department for Transport )அரசு, எரிபொருள் கையிருப்புகளை நெருக்கமாக கண்காணித்து வருகிறது.
மேலும், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்படுமானால், விமான நிறுவனங்களுக்கு தளர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயன்படுத்தாவிட்டால் இழந்துவிடுவீர்கள் (“use it or lose it”) என்ற விதிமுறையில் இருந்து தற்காலிக சலுகை அளிக்கப்படுகிறது.
வழக்கமாக, விமான நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட take-off மற்றும் landing slots-இல் குறைந்தது 80% பயன்படுத்த வேண்டும்.
இந்த தளர்வு, விமான சேவைகளை சீராக நிர்வகிக்கவும், எதிர்பாராத ரத்து முடிவுகளுக்கு நிறுவனங்களுக்கு உதவும் என கூறப்படுகிறது.















