மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ் ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் (USS George H.W. Bush )குறித்த பகுதிக்கு வந்தடைந்துள்ளது.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான மேலதிக அமெரிக்க துருப்புக்களும், அதிநவீன போர் விமானங்களும் குறித்த கப்பலில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
ஹோர்மூஸ் நீரிணையில் அண்மமைக்காலமாக நீடித்து வரும் குழப்பமான நிலையைத் தொடர்ந்து, ஈரான் கடல் எல்லைக்கு அருகில் இக்கப்பல் நுழைந்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படாத நிலையில் இந்த நகர்வு முக்கியத்துவம் பெறுகிறது.
தற்போது இப்பகுதியில் ‘யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட்’ (USS Gerald R Ford) மற்றும் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ (USS Abraham Lincoln) ஆகிய கப்பல்களுடன் ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே பிராந்தியத்தில் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் நிறுத்தப்படுவது “மிகவும் அசாதாரணமானது” என பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.














