வியட்நாம் 100 மெட்ரிக் தொன் யூரியா மற்றும் பாஸ்பேட் உரங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
உத்தியோகப்பூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதியுடன் இன்று காலை இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
வியட்நாமிடம் இருந்து உரம் பெறுவதற்கான இலங்கையின் கோரிக்கைக்கு வியட்நாமிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
முன்னதாக இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ லாமை வரவேற்பதற்காக, ஜனாதிபதி செயலக வளாகத்தில் இன்று காலை அரச வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பொலிஸ் பயிற்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கலாச்சாரம் மற்றும் ஊடகத்துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையே சமய விழுமியங்களைப் பாதுகாத்தல் மற்றும் மத மாணவர் நலன்புரி தொடர்பான விசேட ஒப்பந்தமும் இதில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.













