ஈரானுடனான போர் நிறுத்தம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (12) கூறியதைத் தொடர்ந்து ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கான நம்பிக்கைகள் மங்கின.
அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா போராளிகளுடன் சண்டையிட்டு வரும் லெபனான் உட்பட, அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவர தெஹ்ரான் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், ஹார்முஸ் நீரிணையின் மீதான தனது இறையாண்மையை வலியுறுத்திய தெஹ்ரான், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு, அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பிற நிபந்தனைகளையும் கோரியுள்ளது.
இந்த நிலையில், ஏப்ரல் 7 அன்று தொடங்கிய போர் நிறுத்தத்தின் நிலையை ஈரானின் கோரிக்கைகள் அச்சுறுத்துவதாக ட்ரம்ப் கூறினார்.
ட்ரம்பின் இந்த அறிவிப்புடன் செவ்வாய்க்கிழமையன்று ஆசியாவின் ஆரம்பக்கால வர்த்தகத்தில், பிரென்ட் மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் மேலும் ஏற்றம் கண்டு, ஒரு பீப்பாய் 104.50 டொலருக்கு மேல் உயர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.














