இங்கிலாந்து முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் சட்டவிரோதமாகக் கழிவுகளைக் கொட்டிய சம்பவம் தொடர்பாக 58 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனியின் ‘கிரேட்டர் மான்செஸ்டர்’ (Greater Manchester) பகுதியில் உள்ள விகான் (Wigan) தளம் உட்பட பல இடங்களில் நடந்துள்ள இந்த முறைகேடு குறித்து, வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறையின் ஆதரவுடன் சுற்றுச்சூழல் நிறுவனம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பர்மிங்ஹாம் பகுதியைச் சேர்ந்த அந்த 58 வயது நபர் சுற்றுச்சூழல் விதிமீறல், மோசடி மற்றும் பணமோசடி (Money laundering) ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் நிபந்தனையுடனான பிணையில் (Conditional bail) விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும், இது குறித்த மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.














