எதிர்காலத்தை பறிக்கும் நச்சுப்போதை பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் விழிப்புணர்வு நடைபயணம் ஒன்று இடம்பெற்றது.
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் குறித்த நடைப்பயணம் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.
வவுனியா தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மாவட்ட அலுவலகத்தில் ஆரம்பமான இவ் நடைபயணம் பழையபேருந்து நிலையப்பகுதி வரை ஊர்வலமாக சென்றிருந்தது.
குறித்த நடைபயணத்தில் இளைஞர் யுவதிகள் என பலர் கலந்துகொண்டிருந்ததுடன், போதைப்பாவனைக்கு எதிரான பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.














