மழைவீழ்ச்சி
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இதுவரையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்து 966 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றிரவு சுமார் 100 மி.மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்து 966 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துளது.
கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய முதியவர் நேற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருந்தாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக 4 மாவட்டங்களைச் சேர்ந்த 20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 123 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 2 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மண்சரிவு
இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லேல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவின் உதாகலகம பகுதியில் மண்சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் நேற்று காலை தென்பட்டிருந்த நிலையில்ல அங்கிருந்து 12 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கேகாலை மாவட்டத்தின் தெரனியாகலை, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட, அயகம, இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு வெளியேறுவதற்கான ‘சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க மற்றும் பாதுக்கை பகுதிகளுக்கும், கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பகுதிக்கும், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, ஹொரணை, இங்கிரிய, பாலிந்தநுவர ஆகிய பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பகுதிக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுல்ல, கிரியெல்ல, எலபாத, கலவனை, நிவித்திகல ஆகிய பகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் மீரிகம மற்றும் திவுலபிட்டிய பகுதிகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த மற்றும் மத்துகம பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய பகுதிக்கும் மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பகுதிக்கும் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள நிலைமை
களுகங்கையின் ஆற்றுப்படுகையில் கணிசமான அளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், களுகங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று காலை 8.30 மணி தொடக்கம் அடுத்த 24 மணித்தியாலங்கள் வரையில் இந்த அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.













