ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன மீது இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளின் தீர்ப்புகள் இன்று (26) அறிவிக்கப்பட உள்ளன.
இந்த வழக்குகளின் தீர்ப்புகள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் அவர்களால் ஏப்ரல் 30 ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்தன.
இருப்பினும், இந்த வழக்குகளின் தீர்ப்புகள் மே 26 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அன்று அறிவித்தார்.
சரண குணவர்தன, 2006 ஆம் ஆண்டில் தேசிய லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றியபோது, அந்த சபைக்காக வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்று அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, இலஞ்ச ஆணைக்குழு அவர் மீது இந்த நான்கு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.













