70 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளுக்கான “அஸ்வெசும” நல உதவித் திட்டத்தின் கீழ் மே மாதத்திற்கான கொடுப்பனவுகளை நாளை (29) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, அஸ்வெசும திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட, தகுதியுள்ள சுமார் 7 இலட்சம் முதயவர்களுக்காக அரசு மொத்தம் 349 கோடி ரூபா நிதியை விடுவித்துள்ளது.
ஒவ்வொரு கட்டத்தின் கீழும் நிதி ஒதுக்கீடு பின்வருமாறு:
முதல் கட்டம் – 70 வயதுக்கு மேற்பட்ட 625,128 பயனாளிகளுக்கு ரூ. 3,125,600,000 ஒதுக்கீடு.
இரண்டாம் கட்டம் – 70 வயதுக்கு மேற்பட்ட 73,663 பயனாளிகளுக்கு ரூ. 368,315,000 ஒதுக்கீடு.
தகுதியுள்ள அனைத்து அஸ்வெசும பயனாளிகளும் நாளை முதல் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து தங்களுக்கு உரிமையுள்ள தொகையை எடுத்துக்கொள்ளலாம் என்றும் நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.














