தமிழ்நாட்டில் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கான அனுமதிகள் இருபத்தியொறு நாள்களுக்குள் வழங்கப்படும் என தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா உறுதியளித்துள்ளார்.
தமிழகத்திற்குப் புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவில்கோப்புகள் மற்றும் ஒப்புதல்களுக்கான கால தாமதங்களைத் தவிர்க்கும் வகையில் தமிழக அரசு அதிவேக செயல்பாடுகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய நிறுவனங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் ஒப்புதல் வழங்கப்படும் எனவும் தொழில்முனைவோர் தங்களின் பிரச்சினைகளை அமைச்சரிடமும் முதலமைச்சரிடமும் நேரடியாகக் கொண்டு செல்லும் முறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் செயற்கை நுண்ணறிவு அமைச்சகம், AI நகரம், ட்ரோன் வழித்தடம் மற்றும் மின்சார வாகன உற்பத்தி போன்ற திட்டங்கள் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி ஏற்படுத்தப்படும் எனவும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அழைப்பு விடுத்துள்ளார்.













