பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதனை, சட்டத்தரணியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்பு செயலாளருமான நடராஜர் காண்டீபன் இன்று காலை 9மணியளவில் யாழ் சிறைச்சாலையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த பாடகர் தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து தனது தளத்தில் பதிவிட்டதாக தெரிவித்தே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்போது பாடகர் சங்கீதன், தனது விடுதலை தொடர்பாக தாயாருடன் தொடர்புகொண்டு கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.















