பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (07) அன்று ஃபிளாவியோ கோபோலியை (Flavio Cobolli) 6-1, 4-6, 6-4, 6-7 (5), 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (Alexander Zverev) தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
2021 அமெரிக்க ஓபனை டானில் மெட்வெடேவ் வென்ற பின்னர், ஜன்னிக் சின்னர், கார்லோஸ் அல்காரஸ் மற்றும் நோவாக் ஜோகோவிச், ரஃபேல் நடால் உள்ளிட்ட முன்னாள் உயர்மட்ட வீரர்களுக்கு பின்னர் கிராண்ட்ஸ்லாம் வென்ற முதல் வீரர் இவரே ஆவார்.
மிகப்பெரிய மேடையில் பல ஆண்டுகளாக ஏற்பட்ட தோல்விகள் மற்றும் மனவேதனைகளுக்குப் பின்னர் 29 வயதான ஜேர்மன் வீரர் இந்தப் பட்டத்தை தனதாக்கியுள்ளார்.
2020 அமெரிக்க ஓபன், 2024 ரோலண்ட் கரோஸ் மற்றும் கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய ஓபன் ஆகியவற்றின் இறுதிப் போட்டிகளில் ஏற்பட்ட வேதனையான தோல்விகளுக்குப் பின்னர், கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லாத சிறந்த வீரராக ஸ்வெரெவ் பலரால் கருதப்பட்டிருந்தார்.
இந் நிலையில் வெற்றி பெற்ற அவர், பிரெஞ்சு ஓபனில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வது, மேலும் பல முக்கியப் பட்டங்களை வெல்வதற்கான பாதையைத் திறக்கும் என்று நம்புவதாக் கூறினார்.
இதேவேளை சனிக்கிழமை அன்று நடைபெற்ற மகளிர் இறுதிப் போட்டியில், மிரா ஆண்ட்ரீவா, மாயா ச்வாலின்ஸ்காவை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்து, தனது வாழ்நாளின் மிகப்பெரிய பட்டத்தை வென்றார்.
19 வயதான இவர், 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது இளம் கிராண்ட்ஸ்லாம் மகளிர் சாம்பியன் ஆவார்.















