ஜூன் 6 அன்று நடைபெற்ற மதிப்புமிக்க நோர்வே சதுரங்கப் போட்டியை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற 20 வயதான கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவை, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று சென்னையில் சந்தித்துப் பாராட்டினார்.
இதன்போது, தமிழக அரசின் சார்பில் விஜய், பிரக்ஞானந்தாவிற்கு 50 இலட்சம் ரூபாய் ரொக்கப் பரிசை வழங்கினார்.
இந்த சந்திப்பின் போது முதலமைச்சருக்கும் புதிதாக முடிசூட்டப்பட்ட வெற்றியாளருக்கும் இடையே நடந்த ஒரு கலகலப்பான சதுரங்கப் போட்டி சமூக வலைதளங்களில் விரைவாக வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
முதல்வர் விஜய்யுடனான சந்திப்பிற்குப் பிறகு உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, முதல்வரின் சதுரங்கத் திறமையைக் கண்டு தான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டதாகக் கூறினார்.

















