பிரித்தானிய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செலவினங்கள் குறித்த முக்கிய அறிக்கையை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தொடர் தாமதங்கள், சர்வதேச அரங்கில் அதன் நட்பு நாடுகளுடனான பிரிட்டனின் நம்பகத்தன்மையைக் கெடுத்துள்ளதாக நாடாளுமன்றக் குழு எச்சரித்துள்ளது.
அரசாங்கத்தின் பொதுச் செலவினங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கும் நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு (PAC) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விபரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம்’ என்ற இந்த அறிக்கை கடந்த இலையுதிர்காலத்திலேயே வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இந்தத் தாமதத்தின் காரணமாக இராணுவத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் என நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.
“திட்டங்களை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம், ஆயுதப் படைகளை (Armed Forces) நவீனமயமாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.”
இந்த நிலையில் , அடுத்த மாதம் நடைபெறவுள்ள நேட்டோ (Nato) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இந்தத் திட்டம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் எனத் துணைப் பிரதமர் டேவிட் லாமி உறுதியளித்துள்ளார்.














