தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள ஐந்து தொகுதிகளுக்களுக்கு இடைத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி இந்த வாரம் டில்லி செல்ல உள்ளதாக கூறப்படுகின்றது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று கூட்டுக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது.
இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தேர்தல் விதிப்படி, திருச்சி கிழக்கு தொகுதியை இராஜினாமா செய்தார்.
மேலும், அதிமுக சார்பாக மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பை தொகுதிகளில் நின்று வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்தனர்.
இதனால், ஐந்து தொகுதிகளுகளில் வெற்றிடம் ஏற்பட்டது.
இந்த ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முதலமைச்சர் விஜய் இராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 11ம் திகதி முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.














