பசுபிக் பெருங்கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு உயரம் குறித்த செயற்கைக்கோள் அவதானிப்புகளைத் தொடர்ந்து, ‘சூப்பர் எல் நினோ’ (Super El Niño) நிகழ்வு தற்போது நடைபெற்று வருவதாக நாசா (NASA) உறுதிப்படுத்தியுள்ளது.
உலகளாவிய கடல் மட்ட உயர்வை மிகத் துல்லியமாக அளவிடுவதற்காக உருவாக்கப்பட்ட பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான சென்டினல்-6 மைக்கேல் ஃப்ரைலிச் (Sentinel–6 Michael Freilich) மேற்கொண்ட அளவீடுகள், பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பசுபிக் பெருங்கடலின் சில பகுதிகளில் கடல் மட்டம் உயர்ந்திருப்பதைக் காட்டுகின்றன.
கடல் நீர் வெப்பமடையும்போது அதன் கன அளவு விரிவடைந்து கடல் மட்டத்தை உயரச் செய்கிறது; இதனால் நீரின் உயரம் கடல் வெப்பநிலையை அறிய உதவும் ஒரு நம்பகமான குறியீடாக அமைகிறது என்று நாசா விளக்கியது.
நிலநடுக்கோட்டுப் பசுபிக் பெருங்கடலின் சில பகுதிகளில் காணப்படும் இயல்பை விட அதிகமான வெப்பநிலையும், அதன் விளைவாக ஏற்படும் கடல் மேற்பரப்பு உயர அதிகரிப்பும் ‘எல் நினோ’ (El Niño) நிகழ்வுடன் தொடர்புடையவை என்றும் விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறுகிறது.
ஜூன் 11 அன்று அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அமைப்பு ‘எல் நினோ’ நிகழ்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், நாசாவின் அண்மைய அவதானிப்புகளும் இந்த வானிலை நிகழ்வுக்கான கூடுதல் சான்றாக’ அமைந்துள்ளன.
கவலைக்குரிய விடயம் என்னவென்றால், இந்த எல் நினோ நிகழ்வு ‘பரவலான தாக்கங்களை’ ஏற்படுத்தும் என்று விண்வெளி ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
இதில் அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதிகளில் அதிக மழையும், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற மேற்குப் பசிபிக் பிராந்திய நாடுகளில் வறட்சியும் ஏற்படுவது அடங்கும்.
மேலும், இங்கிலாந்து உட்பட ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் கடும் வெப்பத்தை நாம் எதிர்பார்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
















