உரிய விதிமுறைகளை மீறி மூவருக்கு நியமனம் வழங்கிய குற்றச்சாட்டில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா இலஞ்ச ஊழல் விசாரரணை ஆணைக்குழுவினால் இன்று கைதுசெய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஷியாமலா பெரேரா தேசிய லொத்தர் சபையின் தலைவராகக் கடமையாற்றிய காலப்பகுதியில், சபையின் அங்கீகரிக்கப்பட்ட விதி முறைகளுக்குப் புறம்பாக, ஊழியர் சபையில் மூன்று அதிகாரிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனங்களை வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஒருங்கிணைப்பு அதிகாரிகள இருவர் உள்ளடங்கலாக முகாமைத்துவ உதவி அதிகாரி ஆகியோருக்கே இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பிண்ணனயில் கைது செய்யப்ப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரபிணைகளில் விடுவித்து கொழும்பு நீதவான் அசங்க எஸ் போதரகம உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் சந்தேகநபரின் கடவுச்சீட்டினை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன் வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.













