இந்தோனேசியாவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான Gojek நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் கல்வி அமைச்சரான Nadiem Makarim ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
41 வயதான நதீம் மகரீம், சர்ச்சைக்குரிய மடிக்கணினி கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் இந்தோனேசிய நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து, தான் குற்றமற்றவர் எனத் தொடர்ந்து தெரிவித்திருந்தார்.
நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், 809 பில்லியன் ரூபியா (சுமார் 4.5 கோடி அமெரிக்க டொலர்) இழப்பீட்டுத் தொகையை செலுத்த உத்தரவிட்டுள்ளது. இந்தத் தொகையை செலுத்த முடியாவிட்டால் மேலும் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நடைமுறையில் தனக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நதீம் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு பில்லியன் ரூபியா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதனை செலுத்தத் தவறினால் கூடுதலாக 190 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
நதீம் மகரீம் 2019ஆம் ஆண்டு கோஜெக் நிறுவனத்தை விட்டு விலகி, முன்னாள் ஜனாதிபதி Joko Widodo தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து கல்வி அமைச்சராக 2024ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
எனினும், இந்த வழக்கு போதிய ஆதாரங்களின்றி முன்னெடுக்கப்பட்டதாகவும், அரசியல் எதிரிகளை குறிவைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருப்பதாகவும் சில விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
170 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட கோஜெக், தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய டிஜிட்டல் சேவை தளங்களில் ஒன்றாக விளங்குகிறது.

















