அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அடுத்த சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், சுவிட்சர்லாந்தின் பர்ஜென்ஸ்டாக் ரிசொர்ட் (Bürgenstock Resort) அல்லது இஸ்லாமாபாத் ஆகிய இரு இடங்களில் ஒன்றை இறுதி செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தற்பொழுது நடைபெறுவதால், இப்பேச்சுவார்த்தை வரும் 11-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கமேனியின் உடல் வரும் 9-ஆம் திகதி அடக்கம் செய்யப்படவுள்ளது
இதன் காரணமாக, தலைநகர் தெஹ்ரானின் வான்பரப்பு இன்று முழுமையாக மூடப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி, மெஹ்ராபாத் (Mehrabad) மற்றும் இமாம் கொமேனி ( Imam Khomeini ) சர்வதேச விமான நிலையங்களின் வழக்கமான விமானச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வரும் 9-ஆம் திகதி இறுதி அடக்கச் சடங்கின் போது மஷாத் (Mashhad ) நகர வான்பரப்பும் மூடப்படவுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் கட்டார் நாடுகள் நடுவர்களாகச் செயல்படும் இப்பேச்சுவார்த்தையில், ஈரானின் அணுசக்தி திட்டம், தடைகள் விலக்கு மற்றும் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












