இந்தியாவின் பல பகுதிகளில் புதன்கிழமையும் வியாழக்கிழமையும் பெய்த கனமழை திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் ஒரு கட்டடம் இடிந்து விழுதல் ஆகியவற்றுக்கு காரணமாக அமைந்ததுடன், பல மாநிலங்களிலும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தையும் கடுமையாகப் பாதித்தது.
பல்வேறு இடங்களில் மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர், மேலும் பல பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
மோசமடைந்து வரும் வானிலை சூழலில், நிலைமையை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பேசினார்.
மேலும், மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பருவமழை மேலும் தீவிரமடைந்த நிலையில், டெல்லி-தேசிய தலைநகர் , மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் இதன் தாக்கம் உணரப்பட்டது.
அத்துடன் அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து வருகின்றனர்.














