நீர்கொழும்பு, சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த கைதிகளில் ஓர் இந்தியரும் அடங்குவார்.
உயிரிழந்தவர் 73 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று மேலும் ஒரு சிறை அதிகாரி பலத்த காயங்களால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இம்மோதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதற்கிடையில், அந்த இந்தியரின் உயிரிழப்பு குறித்து கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.













