மத்துகம நெபட பகுதியில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை
மத்துகம நெபட வீதியில் உரகளஞ்சியசாலை அமைந்துள்ள பகுதியில் நேற்றிரவு 8.15 துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஸ்கூட்டர் ரக மோடர்hர் சைக்கிளில் வருகைதந்த அடையாளந்தெரியாத இருவர் துப்பாக்கி சூடு மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
டீ 56 ரக துப்பாக்கியினால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் இதன்போது சுமார் 30 தடவைகள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குடு மதுஷ என்பவரின் வீட்டினை இலக்குவைத்தே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் அவர் குடு ஷாந்த என்பவரின் உதவியாளர் என்பது பொலிஸ விசாரணைகளில் தெரியவந்துள்ளது
கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் மத்துகம பகுதியில் அசங்க என்பவரின் மனைவி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக குடு மதுஷவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது
எனவே இந்த துப்பாக்கி சூடு: பழிவாங்கல் செயற்பாடு அல்லது போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது
எனினும் மதுஷ என்ற நபர் தற்போது நாட்டில் இருந்து தப்பிச்சென்றுள்ள நிலையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சந்தரப்பத்தில் அவரது வீட்டில் அவரின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் இருந்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதுடன் மதுகம பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
துப்பாக்கி தாரிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகாத நிலையில் தப்பிச்சென்றவர்களை கைது செய்வதற்காக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் நாட்டில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியல் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதுடன் அதில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.













