தங்கள் விவசாய நடவடிக்கைகளைத் தொடர அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்க வேண்டியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஒரு வங்கியைத் தொடங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் துறை துணை அமைச்சர் டி.பி. சரத், ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது இதைத் தெரிவித்தார்.
அந்த வங்கி மூலம் ஏக்கருக்கு 100000 ருபாய் உற்பத்திச் செலவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார் .
மேலும், சீனாவுடனான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், ஒவ்வொரு விவசாயத் தொழிலுக்கும் ஒரு ‘வேளாண்மை ஆதரவு மையம்’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் டி.பி. சரத் ,
“இன்னும் இரண்டு அல்லது மூன்று பருவங்களில், நாங்கள் உழவர் சங்கங்களை அமைத்து, விவசாயிகள் சாகுபடி செய்வதற்குத் தேவையான பணத்தை வழங்குவோம்.
நமது விவசாயிகள் பெரும் கடனில் மூழ்கியுள்ளனர்.
அவர்கள் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களிடம் கடன்பட்டுள்ளனர், அதனால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தங்கள் நெல்லை விற்க வேண்டியுள்ளது.
வட்டிக்குக் கடன் வாங்குவதால் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது.
எனவே, நாங்கள் ஒரு வங்கியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.
இதன் மூலம், ஒவ்வொரு விவசாயிக்கும் ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் உற்பத்திச் செலவை வழங்குவோம்.
நாங்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒவ்வொரு விவசாய நிறுவனத்திலும் ஒரு ‘வேளாண்மை உதவி மையத்தை’ நிறுவவும் பணியாற்றி வருகிறோம்.
உலகின் மிகவும் மேம்பட்ட இயந்திரங்கள், பெரிய டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள், ட்ரோன்கள், களை எடுக்கும் மற்றும் கட்டும் இயந்திரங்களை நாங்கள் கொண்டு வருவோம்.
அந்த நிறுவனங்கள் மூலம், விவசாயிகளின் தேவைகளை மலிவு விலையில் பூர்த்தி செய்ய ஏற்பாடுகளைச் செய்வோம்.
நாங்கள் ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறோம்.
விவசாயிகள் எழுப்பும் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிப்பதற்காகவே நாங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வந்தோம்.











