2026 ஃபிஃபா உலகக் கிண்ணத் தொடரில் முதலாவது அரையிறுதிப் போட்டியானது செவ்வாய்க்கிழமை (14) நடைபெறுகிறது.
ஏறக்குறைய ஒரு மாத கால கால்பந்துப் போட்டிகளுக்குப் பின்னர், 48 அணிகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்டமான ஃபிஃபா (FIFA) உலகக் கிண்ணத் தொடரில் இறுதியாக நான்கு அணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
பல திருப்பங்களுக்குப் பின்னர், ஃபிஃபா தரவரிசையில் முன்னணியில் உள்ள நான்கு அணிகளே களத்தில் நிலைத்து நிற்கின்றன.
ஆர்ஜென்டினா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய அணிகள் இப்போது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றப் போட்டியிடுகின்றன.
ஆர்ஜென்டினா மூன்று முறை உலக சாம்பியனாகத் திகழ்கிறது; அதன் அண்மைய வெற்றி 2022-ல் கட்டாரில் கிடைத்தது.
மறுபுறம், 1966-ல் தனது முதல் உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து, தனது இரண்டாவது பட்டத்தை வெல்லும் முயற்சியில் உள்ளது.
பிரான்ஸ் ஏற்கனவே இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளதுடன், 2018-க்குப் பிறகு தனது மூன்றாவது பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.
அதேவேளையில், 2010-ல் தனது ஒரே பட்டத்தை வென்ற ஸ்பெய்ன், இரண்டாவது பட்டத்திற்கான 16 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறது.
முதல் காலிறுதிப் போட்டியில் கைலியன் எம்பாப்பே மற்றும் உஸ்மான் டெம்பலே ஆகியோர் கோல் அடித்ததன் மூலம் பிரான்ஸ், மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
அதே நேரத்தில், இரண்டாவது காலிறுதிப் போட்டியில் ஸ்பெய்ன், பெல்ஜியத்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இதில் லா ரோஜா அணிக்காக ஃபேபியன் ரூயிஸ் மற்றும் மிக்கேல் மெரினோ கோல் அடிக்க, ரெட் டெவில்ஸ் அணிக்காக சார்லஸ் டி கெட்டலேரே கோல் அடித்தார்.
மூன்றாவது அரையிறுதிப் போட்டி இங்கிலாந்துக்கும் நோர்வேக்கும் இடையே நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஜூட் பெல்லிங்ஹாம் இரண்டு கோல்களும், நோர்வே அணிக்காக ஆண்ட்ரியாஸ் ஷெல்டெரப் ஒரு கோலும் அடித்தனர்.
நான்காவது அரையிறுதிப் போட்டியில், மேலதிக நேரத்திற்குப் பின்னர் ஆர்ஜென்டினா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டினா அணிக்காக அலெக்சிஸ் மக் அலிஸ்டர், ஜூலியன் அல்வாரெஸ் மற்றும் லௌதாரோ மார்டினெஸ் ஆகியோர் கோல் அடித்த நிலையில், சுவிட்சர்லாந்து அணிக்காக டான் என்டோய் ஒரு கோலை அடித்தார்.
இந்த வெற்றிகளுடன் பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெய்ன் மற்றும் ஆர்ஜென்டினா ஆகிய அணிகள் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டிகளில் இடங்களைப் பிடித்துள்ளன.

இந்த முடிவுளகளுடன், முதல் அரையிறுதிப் போட்டி டெக்சாஸின் ஆர்லிங்டனில் செவ்வாயன்று (14) நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் பாரம்பரிய வல்லமைமிக்க அணிகளான பிரான்சும் ஸ்பெய்னும் மோதுகின்றன.
அரைஇறுதிக்கு முன்னேறியுள்ள அணிகளிலேயே பிரான்ஸ் அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது என்று கூறலாம்.
மொராக்கோவை 2-0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தி வீழ்த்திய கையோடு இவ்வணி வருகிறது.
இப்போட்டியில் நட்சத்திர முன்கள வீரரான கைலியன் எம்பாப்பே தனது எட்டாவது கோலை அடித்தார்.
இதற்கிடையில், வலுவான தற்காப்பு ஆட்டத்தை நம்பி ஸ்பெய்ன் அணி இறுதிப் போட்டிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது.
இத்தொடரில் முதல்முறையாக ஒரு கோலை விட்டுக்கொடுத்த போதிலும், பெல்ஜியத்திற்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் மைக்கேல் மெரினோ அடித்த முக்கியமான கோல் மூலம் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ‘லா ரோஜா’ (ஸ்பென்ன்) அணி, தனது தோல்வியடையாத ஆட்டங்களின் எண்ணிக்கையை 37-ஆக உயர்த்தியுள்ளது.
புதன்கிழமை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா இங்கிலாந்தை எதிர்கொள்ளும்.
இறுதிப் போட்டி ஜூலை 19 அன்று ஈஸ்ட் ரதர்ஃபோர்டில் உள்ள மெட்லைஃப் மைதானத்திலும், மூன்றாம் இடத்திற்கான போட்டி ஜூலை 18 அன்று மியாமியிலும் நடைபெறும்.












