பிரிட்டனின் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னதாக, தனது இறுதி உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணமாக உக்ரைனுக்குச் சென்றுள்ள கீர் ஸ்டார்மர் (Keir Starmer), உக்ரைனுக்கான பிரிட்டனின் ஆதரவு என்றும் தொடரும் என உறுதியளித்துள்ளார்.
தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராகவும், பிரிட்டனின் அடுத்த பிரதமராகவும் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) பொறுப்பேற்கவுள்ள நிலையில், பிரதமர் ஸ்டார்மர் இன்று உக்ரைன் தலைநகர் கிய்வில் அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை (Volodymyr Zelensky) நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
”கடந்த 2022 பிப்ரவரியில் ரஷ்யா முழு அளவிலான ஆக்கிரமிப்பைத் தொடங்கியதில் இருந்து, உக்ரைன் மக்கள் காட்டி வரும் அசாத்திய மனவலிமையும் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பாதுகாப்பையும் நிலைநிறுத்தியுள்ளது என தனது இந்தப் பயணம் குறித்துப் பிரதமர் கீர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலப் போர்த் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் பிரிட்டன் முன்னணியில் திகழ்வதுடன், உக்ரைனின் பாதுகாப்பிற்காகப் பாதுகாப்புத் துறையில் கூடுதல் முதலீடுகளைச் செய்துள்ளதாகவும் ஸ்டார்மர் சுட்டிக்காட்டினார்.













