இந்தியா – இங்கிலாந்து இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகள், தொழில்முனைவோர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் எனவும் இந்த ஒப்பந்தம் இந்தியா – இங்கிலாந்து இடையிலான உறவில் ஒரு முக்கியமான தருணமாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானது.
இதேவேளை, “இந்த ஒப்பந்தம் இந்தியா – இங்கிலாந்து இடையிலான உறவில் ஒரு முக்கியமான தருணமாகும் எனவும் ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) மற்றும் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவை நடைமுறைக்கு வருவதன் மூலம், இரு நாட்டின் பொருளாதார உறவுகள் மேலும் வலுவடையும் எனவும் பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் 99% ஏற்றுமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் சுங்க வரிகள் நீக்கப்பட உள்ளன.
இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் சுமார் ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.













