புத்தளம், முள்ளிபுரம் பகுதியில் இலங்கை கடற்படையினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 7,000 வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் ‘தம்பபண்ணி’ கடற்படை முகாமிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே, குறித்த சந்தேகநபரின் வீடு தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு இச்சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது, வீடொன்றில் சட்டவிரோதமாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த 7,000 வெளிநாட்டுச் சிகரெட்டுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர் நுரைச்சோலைப் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.








