நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி சம்பவம் அம்பலமானதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் அஸ்வெசும கொடுப்பனவுக்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பெருந்திரளான மக்கள் நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு முன்பாக திரண்டிருந்தனர்.
கடந்த வாரம் நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியில் முறைகேடு இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், அஸ்வெசும கொடுப்பனவுக்காக ஏற்கனவே விண்ணப்பித்திருந்த போதிலும் இதுவரை கொடுப்பனவுகள் கிடைக்காதவர்கள், தங்களது விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிப்பதற்காக இன்று பிரதேச செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதனால், நோர்வூட் பிரதேச செயலக வளாகத்தில் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது







