2022 சர்வதேச மகளிர் தினத்தின் போது, கொழும்பு சின்னமன் கார்டன்ஸ் பொலிஸ் பிரிவில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளை மறித்து, பொலிஸ் அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட ஒரு குழுவினருக்கு எதிரான வழக்கை, நவம்பர் 2 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று (17) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையை நடத்தி வரும் சின்னமன் கார்டன்ஸ் பொலிஸ், இச்சம்பவம் குறித்த விசாரணை நிறைவடைந்துவிட்டதாகவும், விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அறிவுரைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அதன்படி, நவம்பர் 2 அன்று வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.














