இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 36 ஆயிரத்து 557 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 26 இலட்சத்தை கடந்துள்ளது.
இவர்களில் ஒரு கோடியே 17 இலட்தச்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 7 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நேற்று ஒரேநாளில் 445 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 65 ஆயிரத்து 577 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















