• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பது குறித்து கலந்துரையாடல்

வடக்கில் பி.சி.ஆர். பரிசோதனைகள் தடைப்பட்டதற்கான காரணம் வெளியானது!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/05/28
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
85 0
A A
0
53
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைகள் தடைப்பட்டுள்ளமைக்கான காரணத்தை விளக்கி வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக குடாநாட்டின் ஊடகங்கள் சிலவற்றில் யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் கொரோனா தொற்றுக்கான பிசிஆர் பரிசோதனைகள் தடைப்பட்டுள்ளமைக்கு வடமாகாணத்தின் மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் அசண்டையே காரணம் என்ற வகையில் செய்திகள் வெளிவந்துள்ளதை அவதானித்து கவலையடைகின்றோம்.

இச்செய்திகள் எமது திணைக்களம் தொடர்பாக தவறான அபிப்பிராயத்தை மக்களிடையே உருவாக்கும் வகையில் அமைந்துள்ளன. எனவே இச்செய்திகள் தொடர்பான உண்மை நிலவரத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

கொரோனா பெரும் தொற்று இலங்கையில் ஆரம்பித்த காலத்தில் வடமாகாணத்தில் தொற்றுக்குரிய பிசிஆர் பரிசோதனை வசதிகள் ஏதும் இருக்கவில்லை.

மாகாண சுகாதாரத் திணைக்களம் கேட்டுக்கொண்டதன் பேரில் யாழ்ப்பாணம் மருத்துவபீட ஒரு ஒட்டுண்ணியியல் துறையின் ஆய்வுக்கூடத்தில் இப் பரிசோதனைகளைச் செய்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாய்வு கூடத்தில் பிசிஆர் பரிசோதனைகளைச் செய்வதற்கு பல்வேறு அழிபொருள்கள் தேவை. இவை இரண்டு வகைப்படும்.

பிசிஆர் பரிசோதனை இயந்திரத்திற்கான அழிபொருள்கள் – இவை இயந்திரத்தின் வகைக்கு பொருத்தமானவயாக இருக்க வேண்டும். ஆய்வு கூடத்தின் ஏனைய அழிபொருள்கள் – தொற்று நீக்கிகள், முகக் கவசங்கள், அங்கிகள் எனப் பல.

இவ்வழி பொருள்களில் ஆய்வுகூட இயந்திரத்திற்கான அழிபொருள்கள் ஒவ்வொரு முறையும் நேரடியாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயத்தின் அனுமதியுடன், கொழும்பில் அமைந்துள்ள மருந்து வழங்கல் பிரிவிலிருந்து வழங்கப்படும் எனவும், அதற்கான கோரிக்கைக் கடிதம் மருத்துவ பீடத்தின் பீடாதிபதியால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்படல் வேண்டும் எனவும், அப்பொருள்களை பீடாதிபதியின் பெயர் குறிப்பிடப்பட்டு வழங்கப்படும்.

அனுமதிக்கடிதத்ததுடன் செல்லும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்துக்களஞ்சியத்தின் மருந்தாளர் எடுத்து வந்து மருத்துவ பீடத்திற்கு வழங்குவார் எனவும் மருத்துவ பீடத்திற்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குமிடையிலான கடிதப் போக்குவரத்தை மாகாண சுகாதாரத் திணைக்களம் ஒருங்கிணைக்கும் எனவும் சுகாதார அமைச்சின் பணிப்புக்கு அமைய எம்மாலும் மருத்தவ பீடத்தினராலும் யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதேவேளை ஏனைய அழிபொருள்களும் ஆரம்பத்தில் நேரடியாக சுகாதார அமைச்சின் மருந்து வழங்கற் பிரிவினரால் வழங்கப்பட்டிருந்தாலும் அவற்றின் விநியோகம் சீரற்றும் முழுமையற்றும் காணப்பட்டதால் அதற்கான பொறுப்பை மாகாண சுகாதாரத் திணைக்களம் பொறுப்பேற்றுக் கொண்டது.

அதன்படி இவ்வழி பொருள்கள் தொடர்ச்சியாக எம்மால் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. காலக்கிரமத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இப் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையில் உள்ள பிசிஆர் இயந்திரங்கள் பல்வேறு உற்பத்தி நிறுவனங்களின் பல்வேறு வகை மாதிரிகள் ஆகும். அவ்வகையில் யாழ்ப்பாணம் மருத்துவ பீடத்தற்கான பிசிஆர் இயந்திரத்திலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இயந்திரம் வேறுபட்டது. இவற்றுக்கு வகைப்பொருத்தமான அழிபொருட்கள் மட்டுமே பாவிக்க முடியும்.

கடந்த சில வாரங்களாக மருத்துவ பீடத்தின் பிசிஆர் இயந்திரத்திற்குரிய குறிப்பிட்ட ஒரு அழி பொருள் சுகாதார அமைச்சின் கையிருப்பில் இல்லாமல் போய் உள்ளது.

இதனால் சுகாதார அமைச்சு உள்ளூர் கொள்வனவு முறையில் குறிப்பிட்ட பொருளைக் கொள்வனவு செய்ய முடிவு செய்து வழங்குநருக்கு கொள்வனவுக் கட்டளையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வழங்குநரால் குறிப்பிட்ட அழிபொருளை இன்று வரை வழங்க முடியாமல் உள்ளது

மருத்துவ உபகரணங்கள் குறிப்பாக ஆய்வுகூட உபகரணங்கள் பல கோடி ரூபாய் பெறுமதியானவை. இவற்றுக்குரிய அழிபொருட்கள் வகை பொருத்தமானதாக இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் அவ் உபகரணங்களில் பழுது ஏற்படலாம் என்பதுடன் வழங்குநர் வழங்கியுள்ள உத்தரவாதங்களும் செயலிழந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வழங்குநர் மருத்துவ பீடத்தின் இயந்திரத்திற்கு பொருத்தமற்ற வேறு வகை அழிபொருளை மட்டுமே கையிருப்பில் வைத்துள்ளார்.

குறிப்பிட்ட அழிபொருளை பெறுவதற்கு வடமாகாண சுகாதார திணைக்களமும் இலங்கை சுகாதார அமைச்சும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன அழிபொருட்கள் உரிய வழங்குநரிடம் இருந்து கிடைத்ததும் மருத்துவ பீடத்தின் பிசிஆர் பரிசோதனைகளை மீள ஆரம்பிக்க முடியும்.“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாஸ் புயல் சேதங்களை பார்வையிடுகிறார் மோடி!

Next Post

ஹாட்டுக்குள்ள சந்தம் இல்ல : அதுல்யாவுக்காக சிவாங்கி பாடிய அட்டகாஷமான பாடல்!

Related Posts

பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
இலங்கை

பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

2025-06-19
கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!
இலங்கை

கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

2025-06-19
நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்!
இலங்கை

கெஹெலிய, மனைவி மற்றும் மகள் ஆகியோர் விடுவிப்பு

2025-06-19
பல்கலைக்கழக மாணவரின் மரணம்: FR மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்
இலங்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கான காரணம் வௌியானது!

2025-06-19
இலங்கை நாடாளுமன்றத்தில் நடிகர் மோஹன்லால்!
இலங்கை

இலங்கை நாடாளுமன்றத்தில் நடிகர் மோஹன்லால்!

2025-06-19
மதுரையைச் சேர்ந்த சமையல் கலைஞர் விஜயகுமாருக்கு ஜேம்ஸ் பியர்ட் விருது!
இந்தியா

மதுரையைச் சேர்ந்த சமையல் கலைஞர் விஜயகுமாருக்கு ஜேம்ஸ் பியர்ட் விருது!

2025-06-19
Next Post

ஹாட்டுக்குள்ள சந்தம் இல்ல : அதுல்யாவுக்காக சிவாங்கி பாடிய அட்டகாஷமான பாடல்!

இலங்கை அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கையினை முன்வைத்தது அஸ்ட்ராசெனகா!

இலங்கை அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கையினை முன்வைத்தது அஸ்ட்ராசெனகா!

மெக்ஸிகோவில் ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி!

மெக்ஸிகோவில் ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

2025-06-17
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

0
பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

0
நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்!

கெஹெலிய, மனைவி மற்றும் மகள் ஆகியோர் விடுவிப்பு

0
இலங்கை நாடாளுமன்றத்தில் நடிகர் மோஹன்லால்!

இலங்கை நாடாளுமன்றத்தில் நடிகர் மோஹன்லால்!

0
பல்கலைக்கழக மாணவரின் மரணம்: FR மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கான காரணம் வௌியானது!

0
பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

2025-06-19
கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

2025-06-19
நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்!

கெஹெலிய, மனைவி மற்றும் மகள் ஆகியோர் விடுவிப்பு

2025-06-19
பல்கலைக்கழக மாணவரின் மரணம்: FR மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கான காரணம் வௌியானது!

2025-06-19
இலங்கை நாடாளுமன்றத்தில் நடிகர் மோஹன்லால்!

இலங்கை நாடாளுமன்றத்தில் நடிகர் மோஹன்லால்!

2025-06-19

Recent News

பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

2025-06-19
கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

2025-06-19
நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்!

கெஹெலிய, மனைவி மற்றும் மகள் ஆகியோர் விடுவிப்பு

2025-06-19
பல்கலைக்கழக மாணவரின் மரணம்: FR மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கான காரணம் வௌியானது!

2025-06-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.