• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஈக்வடார் சிறை கலவரம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116ஆக உயர்வு- 5பேரின் தலை துண்டிப்பு!

ஈக்வடார் சிறை கலவரம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116ஆக உயர்வு- 5பேரின் தலை துண்டிப்பு!

Anoj by Anoj
2021/09/30
in உலகம்
69 1
A A
0
30
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 80பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 5 பேர் தலை துண்டிக்கப்பட்டதாகவும் சிறைத் துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈக்வடார் வரலாற்றில் மிக மோசமான சிறைச்சாலை படுகொலை என்று அதிகாரிகள் இந்த கலவரத்தினை விபரித்துள்ளனர்.

இத்தாக்குதலில் கத்திகள், துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குயாஸ் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் இருக்கும் லிட்டரல் சிறையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மாலை இருதரப்பு கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது.

இதில் முதற்கட்டமாக லாஸ் வெகோஸ் மற்றும் லாஸ் கேனரஸ் என்று அழைக்கப்படும் இருதரப்பு கைதிகள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இது கலவரமான மோதலில் 24பேர் உயிரிழந்ததோடு 48 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிட்டதட்ட 5 மணி நேர போராட்டதிற்குப் பின்பே கலவரம் அடக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி கில்லர்மோ லாசோ, ஈக்வடாரின் சிறை அமைப்பில் அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார், பொலிஸ்துறை மற்றும் இராணுவ வீரர்களை மற்ற அதிகாரங்களுக்கிடையில் சிறைச்சாலைகளில் ஈடுபடுத்த அரசாங்கம் அனுமதித்தது.

ஈக்வடாரில் மொத்தமுள்ள 60 சிறைகளில் 29 ஆயிரம் கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க முடியும் என்கிற சூழலில் அதைவிட அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது சிறைகளில் பல்வேறு பிரச்சினைகளுக்கு வித்திடுகிறது. குற்ற வழக்குகளில் சிறைகளில் அடைக்கப்படும் போதை பொருள் கடத்தல்காரர்கள், கொலையாளிகள், கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் தனிதனி குழுக்களாக பிரிந்து அடிக்கடி குழு மோதல்களில் ஈடுபடுகின்றனர்.

இது ஒருபுறமிருக்க ஆயிரக்கணக்கான சிறை கைதிகளை கண்காணிக்க வெறும் 1,500 சிறை காவலர்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். இதனால் அங்குள்ள பல சிறைகளில் சிறை அதிகாரிகளை விட கைதிகளின் கையே ஓங்கியுள்ளது.

Related

Tags: ஈக்வடார்கடத்தல்காரர்கள்கொலையாளிகள்கொள்ளை கும்பல்சிறைத் துறைபடுகொலைலாஸ் வெகோஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தடுப்பூசிக்கு எதிரான அனைத்து தவறான தகவல்களையும் நீக்குகிறது யூடியூப் (YouTube)

Next Post

பிரான்ஸில் ஒரு மில்லியன் பேருக்கு மூன்றாம் டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

Related Posts

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!
ஈரான்

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06
பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!

2026-05-06
பிரிஸ்டலில் காதலியை கொலை செய்ய வெடிகுண்டுடன் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் காதலன் உயிரிழப்பு!
இங்கிலாந்து

பிரிஸ்டலில் காதலியை கொலை செய்ய வெடிகுண்டுடன் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் காதலன் உயிரிழப்பு!

2026-05-06
ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் கடன் திட்டத்தில் இணைகிறது பிரித்தானியா!
இங்கிலாந்து

ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் கடன் திட்டத்தில் இணைகிறது பிரித்தானியா!

2026-05-06
லண்டனில் யூத மக்கள் மீது தொடர் தாக்குதல்: பாதுகாப்பிற்கு 100 மேலதிக பொலிஸார் நியமனம்!
இங்கிலாந்து

லண்டனில் யூத மக்கள் மீது தொடர் தாக்குதல்: பாதுகாப்பிற்கு 100 மேலதிக பொலிஸார் நியமனம்!

2026-05-06
Next Post
பிரான்ஸில் ஒரு மில்லியன் பேருக்கு மூன்றாம் டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

பிரான்ஸில் ஒரு மில்லியன் பேருக்கு மூன்றாம் டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

பர்லோ திட்டம் நிறைவுக்கு வருகின்றது: சில துறைகள் ஆதரவு தொடர வேண்டும் என கோரிக்கை!

பர்லோ திட்டம் நிறைவுக்கு வருகின்றது: சில துறைகள் ஆதரவு தொடர வேண்டும் என கோரிக்கை!

ரதல்ல வீதியில் மூன்று வாகனங்கள் விபத்து – 6 பேர் காயம்

ரதல்ல வீதியில் மூன்று வாகனங்கள் விபத்து - 6 பேர் காயம்

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

0
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.