• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா

பாக்.பிரதமரை அகற்றுவதற்கான முயற்சியை அமெரிக்கா ஆதரிக்கின்றதா?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/03/22
in அமொிக்கா, ஆசியா, உலகம்
68 0
A A
0
பிரியந்த குமாரை காப்பாற்ற முயன்றவரை கௌரவித்தார் இம்ரான் கான்
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

உள்நாட்டில் அரசியல் சவால் மற்றும் அதிருப்தியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது அரசாங்கத்தை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னால் அமெரிக்கா இருப்பதாக கருதுகின்றார்.

இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ), ‘எதிர்க்கட்சியின் தற்போதைய நடவடிக்கைக்கு, அதாவது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் பின்னணியில் சர்வதேச ஸ்தாபனம், மறைமுகமாக அமெரிக்கா இருப்பதாகக் கூறப்படும் பிரசாரமொன்றை மேற்கொண்டு வருகின்றது’ என ஜோன் அச்சக்ஷாய் என்பவர் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.

தி நியூஸ் இன்டர்நேஷனல் ஊடகத்தின் எழுத்தாளரும், பலுசிஸ்தானைச் சேர்ந்த அரசியல்வாதியும், பலுசிஸ்தான் அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் மூலோபாயத் தொடர்பு பற்றிய முன்னாள் ஆலோசகருமான ஜோன் அச்சக்ஷாய் ‘பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்தை பாதிக்கும் திறன் அமெரிக்காவிடம் இன்னும் இருக்கிறதா? ஆட்சியை மாற்றும் கூற்று உண்மையானதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்து சில நாட்களுக்கு பின்னர் மொஸ்கோவிற்கு விஜயம் செய்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் உற்சாகமாகவே நாடு திரும்பியிருக்கின்ற போதும் அண்மைய நாட்களில் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு எதிராக அடிக்கடி தனது அறிவிப்புகளை வெளியிடுவதைக் குறைத்துக் கொண்டிருக்கின்றார்.

பிரதமர் இம்ரான் கான் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்தபோதும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளோ அல்லது திட்டமிடப்பட்ட ஒப்பந்தங்களோ எவையும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.

இதனால் கானின் இந்த விஜயத்தினை வெறும் புகைப்படத்திற்கானது என்ற விமர்சனங்கள் உள்நாட்டில் அதிகரிக்க ஆரம்பித்தன. இருப்பினும், விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர் ‘இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காகவே இந்த விஜயத்தை மேற்கொண்டேன்’ என்று நியாயப்படுத்தினார்.

இந்த நிலையில் பிரதமர் கான், கடந்த வாரம் தனது மேற்குல எதிர்ப்பு நிலைப்பாட்டை மீண்டும் கையிலெடுத்துள்ளார்.  உக்ரைனில் ரஷ்யா முன்னெடுத்துள்ள படையெடுப்பைக் கண்டிக்குமாறு பாகிஸ்தானுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் இதற்கு இஸ்லாமாபாத்தில் உள்ள மேற்கத்திய தூதுவர்களே காரணமாக உள்ளதாகவும் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் நடுநிலை வகிக்க விரும்புகிறது என்று அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் கானின் இந்தச் செயற்பாடானது உள்நாட்டில் மேற்கத்தேய எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டது என்றும் இச்செயற்பாடானது மிகவும் எளிதானது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் பாகிஸ்தானின் படைத் தளபதிகள் மற்றும் அரசியல்வாதிகள் மேற்கு சார்புடையவர்களாக தம்மைக் காண்பித்து அதிலிருந்து பெரும் பயனடைந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

குறிப்பாக,  பாகிஸ்தான் பனிப்போர் கால மத்திய ஒப்பந்த அமைப்பு மற்றும் தென்கிழக்காசிய ஒப்பந்த அமைப்பு ஆகிய இராணுவ ஒப்பந்தங்களில் பங்காளியாக இருந்துள்ளது.

2001இல் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான படையெடுபபு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர்,  பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில்  நேட்டோ அமைப்பில் அல்லாத நட்பு நாடாக பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் 2001ஆம் ஆண்டு முதல் அடுத்தடுத்து வந்த அமெரிக்க நிர்வாகங்கள் பாகிஸ்தான் அரசாங்கங்கள் இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டின.

இவ்வாறிருக்கையில், கடந்த ஆகஸ்டில் ஆப்கான் தலைநகர் காபூலுக்கு தாலிபான்கள் திரும்புவதற்கு பாக்கிஸ்தான் தீவிரமாக உதவியமையால் அமெரிக்கா அவசரமாகவும்  குழப்பமான நிலையிலும் வெளியேற வேண்டியிருந்தது.

பாகிஸ்தானின் இந்தச் செயற்பாடானது,  வொஷிங்டனில் உள்ள ஜனாதிபதி ஜோ பைடனின் நிருவாகத்திற்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்தின் தீவிர ஆதரவு தேவையில்லை என்ற உணர்வை வலுப்படுத்தியுள்ளது.

இதனைத் தாடர்ந்து, பைடன் நிர்வாகம், தெற்காசிய பிராந்தியத்தில் பாகிஸ்தானின் வகிபாகத்தினை இன்னுமும் கண்டறியவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

இந்நிலையில், ‘பைடனின் நிருவாகம் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தும் இழிவான செயற்பாட்டை முன்னெடுக்கவில்லை. பைடன் தலைமையில் நடைபெற்ற சர்வதேச ஜனநாயக மாநாட்டில் கூட பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை’ என்பதை அச்சக்ஷாய் மீட்டிக் குறிப்பிட்டார்.

இதேநேரம், ‘குறித்த மாநாட்டை புறக்கணிப்பதாக கூறிய பாகிஸ்தான் புறக்கணிப்புக்கான எந்தவொரு நியாயமான காரணத்தையும் முன்வைக்கத் தவறிவிட்டது.

அரசாங்கம் ஜனநாயக மாநாட்டில் இணைந்திருந்தால், ஜனநாயகத்தின் மீதான அமெரிக்க பாசாங்குத்தனம் என்று கருதப்படும் அதன் நிலைப்பாட்டை வலியுறுத்துவது சிறப்பாக இருந்திருக்கும்,’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் இம்ரான் கானின் அரசாங்கம் ரஷ்யாவைக் கண்டிப்பதற்கு முனையாது, உக்ரையும், ரஷ்யாவையும் அவற்றுக்கு ஆதரவான தரப்புக்களையும் சமநிலைப்படுத்த முயன்றது அதேநேரம் உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பைக் கண்டித்து ஐ.நா.பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும் கூட பாகிஸ்தான் வாக்களிக்கவில்லை.

பாகிஸ்தான் இந்த முடிவானது, அமெரிக்க உள்ளிட்ட மேற்குலகத்தினைப் பொறுத்தவரையில் ரஷ்யாவின் பக்கம் சார்ந்துள்ளதாகவே கருதவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டன.

இருப்பினும், ‘அமெரிக்காவின் தீர்மானத்தினை மீறியமைக்காக பிரதமர் இம்ரான் கானை, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகக் கூறப்படும் கதையானது, ஜனரஞ்சகப் போக்கு பிரசாரமாகவே உள்ளது. இதற்கு பின்னால் உள்நாட்டு சக்திகள் உள்ளன’ என்று அச்சக்ஷாய் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share12Tweet7Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்!
இங்கிலாந்து

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்!

2022-05-23
இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை
இந்தியா

இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை

2022-05-23
பிலிப்பைன்ஸ் படகு தீப்பிடித்து எரிந்ததில் 7பேர் உயிரிழப்பு!
ஆசியா

பிலிப்பைன்ஸ் படகு தீப்பிடித்து எரிந்ததில் 7பேர் உயிரிழப்பு!

2022-05-23
கனடாவில் சக்திவாய்ந்த புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்வு!
கனடா

கனடாவில் சக்திவாய்ந்த புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்வு!

2022-05-23
ஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும்: ஜோ பைடன் வலியுறுத்தல்!
அமொிக்கா

ஜோ பைடன் உள்ளிட்ட 963 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை!

2022-05-23
அவுஸ்ரேலிய பிரதமராக அந்தனி அல்பனிஸ் தெரிவு
அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலிய பிரதமராக அந்தனி அல்பனிஸ் தெரிவு

2022-05-22
Next Post
900 மில்லியன் டொலர் பெறுமதியான நிதி உதவிக்கு இந்தியா பச்சைக்கொடி!

பிம்ஸ்டெக் மாநாட்டில் பாரத பிரதமர் கலந்துகொள்ள மாட்டார்... ! இலங்கை வருகின்றது உயர்மட்ட குழு!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
edit post
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
edit post
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2022-05-18
edit post
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
edit post
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

2022-05-11
edit post
ஒரு வாகனத்திற்கு 10 லீற்றர் டீசல் மாத்திரமே விநியோகிக்கப்படுமாம்!

எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு? வெளியாகிறது அறிவிப்பு?

2022-05-23
edit post
நானுஓயாவில் விபத்து – ஒருவர் உயிரிப்பு – நால்வர் காயம்!

நானுஓயாவில் விபத்து – ஒருவர் உயிரிப்பு – நால்வர் காயம்!

2022-05-23
edit post
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளை விநியோகிக்கப்பட மாட்டாது

2022-05-23
edit post
மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம்!

மக்கள் ஆதரவளிக்காவிட்டால் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை!

2022-05-23
edit post
அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான விசேட சுற்றறிக்கை வெளியாகின்றது!

2022-05-23

Recent News

ஒரு வாகனத்திற்கு 10 லீற்றர் டீசல் மாத்திரமே விநியோகிக்கப்படுமாம்!

எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு? வெளியாகிறது அறிவிப்பு?

2022-05-23
நானுஓயாவில் விபத்து – ஒருவர் உயிரிப்பு – நால்வர் காயம்!

நானுஓயாவில் விபத்து – ஒருவர் உயிரிப்பு – நால்வர் காயம்!

2022-05-23
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளை விநியோகிக்கப்பட மாட்டாது

2022-05-23
மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம்!

மக்கள் ஆதரவளிக்காவிட்டால் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை!

2022-05-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.