25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 370 பேர் காணாமல் போயுள்ளதுடன் 309,607 குடும்பங்களைச் சேர்ந்த 1,118,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், பதுளை மாவட்டத்தில் 71 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 68 பேரும், குருநாகலையில் 37 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், கண்டி மாவட்டத்தில் 150 பேரும், நுவரெலியாவில் 64 பேரும், பதுளையில் 53 பேரும், குருநாகலையில் 35 பேரும் பேரிடர் காரணமாக இன்னும் காணாமல் போயுள்ளனர்.












