ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நேற்று பசில் ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே தொலைபேசி வாயிலாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.