• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
குஜராத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான தொங்குபாலம் அறுந்து விழுந்து விபத்து – 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

குஜராத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான தொங்குபாலம் அறுந்து விழுந்து விபத்து – 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

Dhackshala by Dhackshala
2022/10/31
in இந்தியா
69 1
A A
0
52
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு நதிமீதான தொங்குபாலம் திடீரென அறுந்து விழுந்ததால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சாத் பூஜா எனப்படும் வடமாநில திருவிழாவுக்காக சுமார் 500 பேர் மோர்பி நகரிலுள்ள கேபிள் பாலத்தின் மீது நேற்று மாலை திரண்டிருந்தனர். சுற்றுலாத் தலமாக விளங்கும் அந்த பாலத்தில் அதிகளவில் மக்கள் அனுமதிக்கப்பட்டதன் விளைவாக திடீரென அந்த தொங்குப் பாலம் அறுந்து விழுந்துள்ளது.

குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 400 பேர் ஆற்றில் விழுந்தனர். பலர் பாலத்தின் விழுந்த பகுதியைப் பிடித்துக் கொண்டு தொங்கியபடி உயிருக்குப் போராடினர்.

இதனையடுத்து, இது குறித்து அறிந்த உள்ளுர் மக்கள் மற்றும் பொலிஸார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 132ஆக பதிவாகியுள்ளதாகவும் 177 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் காயமடைந்த 19 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என கூறப்படுகிறது.

மீட்புப்பணிகளில் தொடர்ச்சியாக முப்படைகள் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்களும் ஈடுபட்டு வருகின்றன.

குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். மருத்துவமனையில் காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையை மேற்கொண்டார்.

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த தொங்குப்பாலம் பழுதடைந்ததால், புனரமைக்கப்பட்டு கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் திறக்கப்பட்டது.

அரசின் டெண்டரைப் பெற்று தனியார் நிறுவனம் ஒன்று இந்த புனரமைப்பு பணியை மேற்கொண்டுள்ளது. பணி முடிந்த பின் அதிகாரிகள் பாலத்தின் உறுதி தன்மையை பரிசோதித்து சான்றிதழ் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநில அரசு தலா 4 இலட்சம் ரூபாயும் மத்திய அரசு தலா 2 இலட்சம் ரூபாயும் நிவாரணமாக அறிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து குஜராத்தில் இன்று பங்கேற்க இருந்த சில நிகழ்ச்சிகளை பிரதமர் நரேந்திர மோடி இரத்து செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: குஜராத்விபத்து
Share34Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

அருணாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்!
இந்தியா

இந்தியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம்!

2023-03-22
ஜம்முவில் அகதிகளின் பிரச்சினைகளை செவிமடுப்பதற்கு நடவடிக்கை
இந்தியா

ஜம்முவில் அகதிகளின் பிரச்சினைகளை செவிமடுப்பதற்கு நடவடிக்கை

2023-03-22
உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு உறுதி – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இந்தியா

மூன்று மாதத்தில் ஆர்டிஐ இணையத்தை உருவாக்க வேண்டும் – அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

2023-03-21
இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் 3949 வீடுகள் – தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தில் அறிவிப்பு
இந்தியா

இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் 3949 வீடுகள் – தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தில் அறிவிப்பு

2023-03-20
இரண்டு நாட்கள் அரசு பயணமாக ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை!
இந்தியா

இரண்டு நாட்கள் அரசு பயணமாக ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை!

2023-03-20
உலகிலேயே அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது – மோடி
இந்தியா

ஜனநாயகத்தின் வெற்றியை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை – பிரதமர் மோடி

2023-03-19
Next Post
குஜராத்தில் தொங்குபாலம் இடிந்து வீழ்ந்து விபத்து – ரணில் இரங்கல்

குஜராத்தில் தொங்குபாலம் இடிந்து வீழ்ந்து விபத்து - ரணில் இரங்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

2023-03-06
வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

2023-03-07
பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

எரிபொருள் விலை குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு

2023-03-21
நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாட அரசாங்கம் தீர்மானம்!

டொலரின் கொள்விலை மற்றும் விற்பனை விலைகளில் வீழ்ச்சி !

2023-03-21
அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து கொண்டு இலங்கைவர தடை !

தங்கத்தின் விலையில் இன்று மேலும் வீழ்ச்சி !

2023-03-07
தலைப்பிறை தென்படவில்லை – வெள்ளிக்கிழமை நோன்பு ஆரம்பம்!

தலைப்பிறை தென்படவில்லை – வெள்ளிக்கிழமை நோன்பு ஆரம்பம்!

2023-03-22
யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை!

யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை!

2023-03-22
பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார் ரஞ்சித் சியம்பலபிட்டிய!

330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இன்று வழங்குகின்றது ஐ.எம்.எப். !!

2023-03-22
எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை ஆய்வு செய்யாமல் ஏற்றுக்கொள்ள முடியாது – சஜித்

2023-03-22
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் இதுவரையில் 90 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

தினேஷ் ஷாப்டரின் மரணம் : விசாரணைகள் ஒத்திவைப்பு!

2023-03-22

Recent News

தலைப்பிறை தென்படவில்லை – வெள்ளிக்கிழமை நோன்பு ஆரம்பம்!

தலைப்பிறை தென்படவில்லை – வெள்ளிக்கிழமை நோன்பு ஆரம்பம்!

2023-03-22
யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை!

யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை!

2023-03-22
பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார் ரஞ்சித் சியம்பலபிட்டிய!

330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இன்று வழங்குகின்றது ஐ.எம்.எப். !!

2023-03-22
எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை ஆய்வு செய்யாமல் ஏற்றுக்கொள்ள முடியாது – சஜித்

2023-03-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.