• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்படுகிறது – ரவிகரன் குற்றச்சாட்டு

வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்படுகிறது – ரவிகரன் குற்றச்சாட்டு

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/01
in பிரதான செய்திகள், யாழ்ப்பாணம்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்பட்டு வருகிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

மகாவலி எல் என்னும் பெயரில் ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுவதாக மக்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்டிருந்த ரவிகரன்அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”முல்லைத்தீவு மாவட்டத்தில் அக்கரவெளி மற்றும் மணற்கேணி ஆகிய பகுதிகளில் காணிகள் அபகரிப்பு நடைபெறுவதாக ஏற்கனவே சுட்டிகாட்டியிருந்தோம்.

தற்போது அக்கரவெளி பகுதியில் தமிழர்கள் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட பூர்விக காணிகளை மக்கள் சென்று பார்த்த போது வன இலாகாவினுடைய பொறுப்பில் இருந்த காணிகள் மகாவலிக்கு விடுவித்து கொடுத்திருக்கிறார்கள்.

11 சிங்கள மக்களுக்கு தலா 25 ஏக்கர் படி வழங்கப்பட்டுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது. இவ்வாறு கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுகேணி போன்ற ஆறு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஏற்கனவே மகாவலி எல் திணைக்களமானது, மக்களிடம் எத்தனை ஏக்கர் இருந்தாலும் இரண்டு ஏக்கர் வீதம் தான் தரமுடியும் என கூறிய போது தங்களுடைய காணிகள் தங்களுக்கே வேண்டும் என விட்டுக் கொடுக்காது இருந்தார்கள்.

இவ்வாறு இருக்கும் போது தமிழர்களுடைய பூர்வீக காணிகள், வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட காணிகள் எங்களுக்கோ, மாவட்ட செயலகத்திற்கோ , பிரதேச செயலகத்திற்கோ தெரியாமல் மகாவலி எல் என்ற அதிகார சபையின் ஊடாக கொழும்பில் உள்ள சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாயின் இதனை யாரிடம் முறையிடுவது.

மக்கள் வாழ்வாதாரத்திற்காக எங்கு சென்று முட்டிக்கொள்வது. இவ்வாறு கொடுமையான வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை இலகுவான முறையில் வனவள திணைக்களமானது மாகவலிக்கு விடுவித்து கொடுத்திருக்கின்றது.

மகாவலிக்கு விடுவித்து எங்கோ இருக்கின்ற சிங்கள மக்களுக்கு கொடுக்கின்றது. எங்களுக்கு அருகாமையிலுள்ள காணிகள் விடுவிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 1500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் வனவளத்திணைக்களத்திடம் இருந்து பெற்று சிங்கள மக்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மகாவலி அதிகார சபை மேற்கொள்வதாக மக்களாலும், அதிகாரிகளாலும் அறியக்கூடியதாக உள்ளது.

சொந்த காணிகளில் விவசாயம் செய்ய முடியாத வகையில் இலங்கை அரசாங்கமானது தமிழ் இனத்தை அழிக்கும் நோக்கோடும் வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடும் செயற்பட்டு கொண்டு வருகின்றது என்பதனை சுட்டி காட்டுகின்றோம்.

இதற்கான சரியான தகவல் கிடைத்ததும் ஒரு போராட்டத்தை மேற்கொள்வோம் என்பதை கூறிக்கொள்கின்றேன்” இவ்வாறு ரவிகரன் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Jaffnaயாழ்ப்பாணம்ரவிகரன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி தலைமையில் நாளை கூடவுள்ள ஐ.தே. க வின் செயற்குழு!

Next Post

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம்; பக்தர்களுக்கு விஷேட அறிவித்தல்

Related Posts

யாழ். போதனாவில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல்
இலங்கை

யாழ். போதனாவில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல்

2026-01-15
சரியான நேரத்திலேயே எமது நிலைப்பாட்டை அறிவிப்போம்!
முக்கிய செய்திகள்

ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை -எம்.ஏ சுமந்திரன்

2026-01-15
சிறிதரன் எம்.பியைச் சந்தித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்
இலங்கை

சிறிதரன் எம்.பியைச் சந்தித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்

2026-01-15
யாழில். சூட்கேசில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்
இலங்கை

யாழில். சூட்கேசில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்

2026-01-15
இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்
இலங்கை

இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்

2026-01-14
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது
கொழும்பு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது

2026-01-14
Next Post
செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம்; பக்தர்களுக்கு விஷேட அறிவித்தல்

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம்; பக்தர்களுக்கு விஷேட அறிவித்தல்

லங்கா பிரீமியர் லீக்: தம்புள்ளை அவுரா அணிக்கு 130 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஜப்னா கிங்ஸ் அணி!

லங்கா பிரீமியர் லீக்: தம்புள்ளை அவுரா அணிக்கு 130 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஜப்னா கிங்ஸ் அணி!

பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது : முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

ஜனாதிபதியான பின்னரே பிரச்சினைகளுக்குத் தீர்வு? : மைத்திரிபால சிறிசேன!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை  நிராகரித்த கஸ்ஸப தேரர்!

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

0
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

0
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

0
ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

0
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 12 மணி நேரத்துக்கு எச்சரிக்கை!

இன்று மாலை இடியுடன் கூடிய மழை

0
சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை  நிராகரித்த கஸ்ஸப தேரர்!

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

2026-01-15
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

2026-01-15
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

2026-01-15
ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

2026-01-15
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 12 மணி நேரத்துக்கு எச்சரிக்கை!

இன்று மாலை இடியுடன் கூடிய மழை

2026-01-15

Recent News

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை  நிராகரித்த கஸ்ஸப தேரர்!

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

2026-01-15
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

2026-01-15
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

2026-01-15
ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

2026-01-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.