களுத்துறையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 29 வயதுடைய இளைஞரைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
காணாமல் போன நபர் பொல்வத்த கொல்லகே நவோத் கிம்ஹான் (Polwatta Gollage Nawod Gimhan) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கடந்த ஜனவரி 17 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் காணாமல் போனமை தொடர்பில் அவரது தந்தை களுத்துறை தெற்கு பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸாரின் கூற்றுப்படி, கிம்ஹன் தோராயமாக 5 அடி மற்றும் 5 அங்குல உயரம், மெலிதான உடலமைப்பு மற்றும் தாடியுடன் குட்டையாக வெட்டப்பட்ட முடி ஆகியவற்றைக் கொண்டுள்ளார்.
காணாமற்போன நபரின் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், அவர் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் களுத்துறை தெற்குப் பொலிஸாருக்கு பின்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
071-8591691 -பிரதான பொலிஸ் நிலையம் / 071-8594360 – விசாரணைப் பிரிவு